உள்ளூர் செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்- கலெக்டர் பேட்டி
- அரசின் திட்டங்களை இடையூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது பணி.
- திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டராக சாரூஸ்ரீ பொறுப்–பேற்றுக் கொண்டார்.
இவர் 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் துணைஆ ட்சியராக பதவியேற்று, பின்பு வணிகவரித்துறையின் இணை இயக்குநராக பதவி வகித்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து,தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்–பேற்றுள்ளார்.
பொறுப்பேற்றதற்கு பின் நிருபர்களிடம் கலெக்டர் கூறிய தாவது:-
திருவாரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன். அரசின் திட்டங்களை இடை யூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது தலையாய பணி.
திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.