உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மனைவி திட்டியதால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-01-05 14:26 IST   |   Update On 2023-01-05 14:26:00 IST
  • கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
  • கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

கடலூரை அடுத்த வெங்கடாம் பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). விவசாயி. கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரது மனைவி மகேஸ்வரி சக்திவேலை திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News