உள்ளூர் செய்திகள்

மைனர் பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர்

Published On 2023-08-19 08:28 GMT   |   Update On 2023-08-19 08:28 GMT
  • போக்சோவில் வழக்கு பதிவு
  • போலீசார் விசாரணை

வேலூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். குடியாத்தம் அடுத்த கொட்டாற மடுகு நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 21). இளம் பெண்ணும் கிருஷ்ணமூர்த்தியும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரது வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது இளம் பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியாக உள்ள தனது மகளை சேம் பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்துச் சென்றார்.

அங்கு இளம் பெண்ணை பரிசோதித்த டாக்டர் மைனர் பெண் கர்ப்பமாக உள்ளது குறித்து சமூக நலத் துறைக்கு தகவல் அளித்தார்.

சமூக நலத்துறை அதிகாரிகள் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சியாமளா போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News