உள்ளூர் செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் 3-வது முறையாக அம்மன் கோவிலில் உண்டியல் உடைப்பு
- தேவி கருமாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
- தேவி கருமாரியம்மன் கோவிலில் இதற்கு முன்பும் 2 முறை கொள்ளை நடந்து உள்ளது.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலை பகுதியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சிலர் அவ்வழியே சென்றதால் மர்ம கும்பல் கொள்ளை திட்டத்தை கைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கோவிலில் இதற்கு முன்பும் 2 முறை கொள்ளை நடந்து உள்ளது. தற்போது 3-வது முறையாக கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து உள்ளனர்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.