உள்ளூர் செய்திகள்

அச்சமங்கலம் கிராமத்தில் இடி தாக்கி வீடு எரிந்தது

Published On 2023-04-22 07:54 GMT   |   Update On 2023-04-22 07:54 GMT
  • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
  • திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெயில் 104 டிகிரி சுட்டெரிக்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசி மழை வரும் சூழல் ஏற்பட்டது அப்போது பல்வேறு பகுதிகளில் இடி இடித்தது.

திருப்பத்தூர் அருகே உள்ள அச்சமங்கலம் கிராமத்தில் அன்பு என்பவரது ஓட்டு வீட்டில் திடீரென இடி தாக்கியது.இதில் மின்மீட்டர் பற்றி எரிந்து உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இருந்த போதிலும் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் உள்ள அனைவரும் அவரது மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு சென்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

Tags:    

Similar News