ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்குறுகிய கால பயிற்சி சேர்க்கை
- பிப்ரவரி மாதம் வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
- வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் அரசினர் தொழி ற்பயிற்சி நிலையத்தில், சி.என்.சி. ஆப்ரேட்டர் டர்னிங், வெர்டிகல் மெஷினிங் சென்ட்ர், மெனுவல் மெட்டல் ஆர்க் வெட்டிங், ஷீல்டடு மெட்டல் ஆர்க் வெல்டிங் மற்றும் பீல்டு டெக்னீஷியன், யுபிஎஸ்
மற்றும் இன்வெர்டர் குறுகிய கால பயிற்சி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 240 காலி இடங்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
இதில் சேர 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மெனுவல் மெட்டல் ஆர்க் வெல்டிங், ஷீல்டடு மெட்டல் ஆர்க் வெல்டிங், பீல்டு டெக்னீஷியன் - யு.பி.எஸ். மற்றும் இன்வெர்டர், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சி.என்.சி. ஆப்ரேட்டர் டர்னிங், சி.என்.சி. ஆப்ரேட்டர் வெர்டிகல் மெஷினிங் சென்டர் ஆகிய பிரிவுகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள். பயிற்சி காலம் 3 மாதங்கள் ஆகும். பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடியாக வேலைவா ய்ப்பு உறுதி செய்யப்படும். பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் திறன் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.