உள்ளூர் செய்திகள்

ஓசூர் பாரதியார்நகர் அரசு பள்ளியில் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம் -மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு

Published On 2022-11-08 15:49 IST   |   Update On 2022-11-08 15:49:00 IST
  • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
  • 4 மாணவர்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்ல தயாரான போது, திடீரென 1- ம் வகுப்பறையில் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து பொல, பொல என தரையில் கொட்டியது.

இதில் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் மீதும் சிமெண்ட் பூச்சு விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது. 4 மாணவர்களுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மற்ற மாணவர்களை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News