உள்ளூர் செய்திகள் (District)

விவசாயி கொலை வழக்கில் அவரது தம்பி மகன் இருவர் கைது

Published On 2023-08-24 09:19 GMT   |   Update On 2023-08-24 09:19 GMT
  • அரியலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் அவரது தம்பி மகன் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
  • சொத்து பிரச்சனை காரணமாக கொலை செய்தனர் என விசாரணையில் தெரிய வந்தது


அரியலூர்,

அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தம்பி மகன்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.கீழப்பழுவூரை அடுத்த வாரணவாசி அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரா. மணி (63). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மணியின் தம்பி கணேசன் மகன்களான அருண்குமார்(29), மோகன்ராஜ்(27) ஆகிய இருவரும் மணியை கொலை செய்தது தெரியவந்தது.மேலும் விசாரணையில், மணியின் இரண்டாவது மனைவியான பிரேமாவும், மணியின் தம்பி கணேசனின் மனைவியான மோகனவள்ளியும் அக்கா, தங்கை என்பதும், திருச்சி புள்ளம்பாடி அடுத்த விரகாலூர் கிராமத்தில் உள்ள அவர்களது பெயரிலுள்ள கூட்டுப் பட்டாவை பிரித்துத்தர மணி மறுத்துள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மோகனவள்ளியின் மகன் அருண்குமார், மணியை கொலை செய்ததும், இக்கொலைக்கு மோகன்ராஜ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags:    

Similar News