உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-06-16 14:35 IST   |   Update On 2023-06-16 14:35:00 IST
  • போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோத்தகிரி,

தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்தில் நடக்கும் விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோத்தகிரி போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

அப்போது இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின்சீட்டில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். கார் டிரைவர்கள் அவசியம் சீட் பெல்ட் அணிய வேண்டும்,, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது, போக்கு வரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபரா தம் ஆகியவை குறித்து பொது மக்களிடம் விழிப்பு ணர்வு செய்யப் பட்டது. அதன்பிறகு போலீ சார் காமராஜர் சதுக்கம்,பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களிடமும் விழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பதி, சிறப்பு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சிவக்குமார்,பாலசுப்ரமணியம்,காவல் உதவி ஆய்வாளர் பிலிப்ஸ் சார்லஸ் , மற்றும் போக்குவரத்து காவலர்கள்,நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News