உள்ளூர் செய்திகள்
11-ந் தேதி நடக்கிறது :நரியூத்து பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்
- மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
- பல்வேறு குறைகளுக்கு மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மயிலாடும்பாறை நரியூத்து கிராமத்தில் வருகிற 11-ந் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேசன் அட்டை, விபத்து நிவாரணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, விவசாயம் மற்றும் போக்குவரத்து துறை தொடர்பாக மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.