உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை

Published On 2022-07-22 08:39 GMT   |   Update On 2022-07-22 08:39 GMT
  • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
  • சுற்றி இருக்கும் வெயிலும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கடலூர்:

தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காட்டு மயிலூர், காட்டுமன்னா ர்கோவில்,வேப்பூர், லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. இப்பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து வந்தன.

இதன் காரணமாக கடலூர், நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மின்சார துறை ஊழியர்கள் இரவு முழுவதும் மின்தடை காரணம் குறித்து ஆய்வு செய்து மின் இணைப்பு அதிகாலை வரை வழங்கி வந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றி இருக்கும் வெயிலும் அதிகரித்து காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்னும் வருமாறு:- காட்டுமன்னார்கோவில் - 44.2,எஸ்.ஆர்.சி குடிதாங்கி - 42.5, வேப்பூர் - 39.0,லால்பேட்டை - 38.0,பண்ருட்டி - 30.0 ஆட்சியர் அலுவலகம் - 21.6வானமாதேவி - 21.6 காட்டுமயிலூர் - 4.0 9. கடலூர் - 3.8 என‌ மொத்த - 244.70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

Tags:    

Similar News