உள்ளூர் செய்திகள்

சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர்.

கூடலூரில் பலத்த மழை ஆக்கிரமிப்புகளால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Published On 2023-05-21 12:33 IST   |   Update On 2023-05-21 12:33:00 IST
  • கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடலூர்:

கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன .கூடலூர் மெயின் பஜார் வீதியில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதில் பெரும் பான்மையான இடங்களில் கழிவுநீர் கால்வாய் களை மறித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர்.

இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்தது .இதன் காரணமாக கூடலூர் மெயின் பஜார் வீதி, பூக்கடை தெரு , கிழக்கு காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கழிவுநீர்களுடன் சேர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சாக்கடை கால்வாயில் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் மற்றும் மழை நீர் குளம் போல் தேங்கியது.இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகளும் தவித்தனர். எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக பஜார் வீதி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் மற்றும் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News