உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை

Published On 2022-08-27 09:52 GMT   |   Update On 2022-08-27 09:52 GMT
  • கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.
  • கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில் மரம் சேர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கடலூர்:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது . இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பலத்த இடியுடன் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் பண்ருட்டி நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு வேப்பூர் பெல்லாந்துறை எஸ்.ஆர்.சி. குடிதாங்கிவிருத்தாசலம் தொழுதூர் பண்ருட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்தது. இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வழக்கமான நடைபெற்று வரும் விவசாய பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு தற்போது நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது இதன் காரணமாக விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கடலூர் பகுதியில் ஒரு சில இடங்களில் மரம் சேர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- வேப்பூர் - 97.0, பெல்லாந்துறை - 79.8, குப்பநத்தம் - 69.6, கீழச்செருவாய் - 56.0, காட்டுமயிலூர் - 55.0, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 39.5, விருத்தாசலம் - 29.0, தொழுதூர் - 22.0, மீ-மாத்தூர் - 18.0, பண்ருட்டி - 15.0, லக்கூர் - 8.0, வானமாதேவி - 5.0, கலெக்டர் அலுவலகம் - 1.0, கடலூர் - 0.2, மொத்த மழை - 495.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News