உள்ளூர் செய்திகள்

நாளை மற்றும் 2-ந் தேதி கன மழை பெய்யும்

Published On 2022-07-30 06:41 GMT   |   Update On 2022-07-30 06:41 GMT
  • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல்.

சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை மற்றும் வருகிற 2-ந் தேதியும் மிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை (31-ந் தேதி) மற்றும் 2-ந் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News