உள்ளூர் செய்திகள்

ஏற்காட்டில் கனமழை

Published On 2022-06-16 14:40 IST   |   Update On 2022-06-16 14:40:00 IST
ஏற்காட்டில் கனமழை பெய்ததது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது.

குறிப்பாக ஏற்காடு, வீரகனூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோடை காலத்தில் பெய்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் ேதங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 40.6 மி.மீ. மழை பெய்துள்ளது. வீரகனூர் 25, ஓமலூர் 9.6, கரியகோவில் 8, கெங்கவல்லி 7, தம்மம்பட்டி 4, சஙககிரி 2.1, ஆனைமடுவு 2, சேலம் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 100.1 மி.மீ. மழை பெய்துள்ளது.  

Tags:    

Similar News