கனரக வானகங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்
- பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் காணப்படுகிறது.
- கனரக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைப்பதால் பெரும் இடர்பாடும், விபத்துகளும் நேரிடுகிறது.
சீர்காழி:
சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது, சீர்காழி நகரில் பிரதான பகுதிகளான மணிகூண்டு, அரசுமருத்துவமனைசாலை, தென்பாதி பகுதிகளில் தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அதிகளவு இயங்கி வருகிறது. மேலும் நகரில் அரசு உதவிபெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பிரதான சாலைகள் மிகவும் போக்குவரத்து நெருக்கடியகாவும், நெரிசலாகவும் இருப்பதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்றுவருவது சிரமமாக உள்ளது. பள்ளி நேரங்களிலும் கனரக வாகனங்களும் நகரில் ஆங்காங்கே சென்று வருவதும், சாலையோரம் நிறுத்தி வைப்பதாலும் பெரும் இடர்பாடும், விபத்துக்களும் நேரிடுகிறது. ஆகையால் பள்ளி நேரங்களில் காலை 8 மணி முதல் 9.30 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கட்டிட பயன்பாடு மற்றும் இதர வணிக பயன்பாட்டிற்காக வரும் கனர ரக வாகனங்கள் நகர எல்லைக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.