உள்ளூர் செய்திகள்

அகற்றப்படாமல் தேங்கி கிடக்கும் குப்பைகள்.

தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

Published On 2022-10-27 07:35 GMT   |   Update On 2022-10-27 07:35 GMT
  • மருத்துவ கழிவுகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.
  • தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்கி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

சீர்காழி:

சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள அம்மா நகரில் குடியிருப்புகள் அருகே

குப்பைகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக அள்ளப்படாமல் கிடந்து வருகிறது.

சாலை ஓரத்தில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு குப்பைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள், பழைய துணிமணிகள், டயர்கள் போன்றவைகள் அள்ளப்படாமல் பல மாதங்களாக கொட்டப்பட்டு கிடக்கிறது.

மேலும் இறைச்சி கழிவுகள், சாலையில் அடிபட்டு இறந்த தெரு நாய், பூனைகள் ஆகியவையும் அவ்வபோது குப்பைகளில் வீசப்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளின் கிடக்கும் தேங்காய் சிரட் டை, டயர்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் டெங்கு போன்ற நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பல மாதங்களாக அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் அவ்வப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் எரித்து வருவதால் புகைமூட்டத்தாலும் குடியி ருப்பு வாசிகள் வேதனை அடைந்திருக்கின்றனர்.

ஆகையால் குப்பைகளை முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தி அந்த இடத்திற்கு குப்பை தொட்டி வைத்து சீர் செய்ய வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News