உள்ளூர் செய்திகள்

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் ஜெயிலில் அடைப்பு

Published On 2023-02-27 07:16 GMT   |   Update On 2023-02-27 07:16 GMT
  • புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள் (58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே மாவுருட்டி புதுவலவு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மனைவி பழனியம்மாள் (58). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் செங்கோட்டுவேலன்(39). பொறியியல் பட்டதாரி யான இவர், காளான் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். பழனியம்மாள் தனது மகள் ரம்யாவை கடந்த 12 வருடங்களுக்கு முன் செங்கோட்டு வேலனுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் செங்கோட்டுவேலனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டுவேலனிடம் கோபித்துக் கொண்டு ரம்யா தனது 2 குழந்தைகளுடன் தாய் பழனியம்மாள் வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்று விட்டார்.

இதையடுத்து நேற்று

மாமியார் பழனியம்மாள் வீட்டுக்கு சென்று மனை வியை வீட்டுக்கு வரும்படி செங்கோட்டுவேலன் அழைத்துள்ளார். ஆனால் ரம்யா வர மறுத்துவிட்டார். அப்போது பழனியம்மாளுக்கும், செங்கோட்டுவேலனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செங்கோட்டுவேலன், தனது கையில் வைத்திருந்த கத்தியால் பழனியம்மாளை குத்தியுள்ளார். வலி தாங்க முடியா மல் அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது செங்கோட்டுவேலன் அங்கி ருந்து தப்பி சென்றுவிட்டார். பழனியம்மாளை நாமக்கல் லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பரமத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனியம்மாளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற செங்கோட்டுவேலனை கைது செய்து, பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.


Tags:    

Similar News