உள்ளூர் செய்திகள்
கஞ்சா பதுக்கி வைத்த வட மாநில தொழிலாளிகள் 2 பேர் கைது
- ரக்ஷாபந்தன் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இவர்கள், மீண்டும் ஓசூர் திரும்பும் போது, ரெயிலில் கஞ்சா கொண்டு வந்துள்ளனர்.
- அறையை சோதனையிட்டு அங்கு பதுக்கி வைத்திருந்த நான்கரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.
ஓசூர்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தன்குமார் (வயது22), மற்றும் சத்ருகன்குமார்(25). நண்பர்களான இவர்கள், ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தில், உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகி றார்கள். மேலும் அந்த பகுதியிலேயே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், ரக்ஷாபந்தன் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இவர்கள், மீண்டும் ஓசூர் திரும்பும் போது, ரெயிலில் கஞ்சா கொண்டு வந்துள்ளனர். இதனை, உடன் பணிபுரியும் நண்பகளுக்கு வழங்க எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார், நேற்று மாலை ஆலூர் சென்று, அறையை சோதனையிட்டு அங்கு பதுக்கி வைத்திருந்த நான்கரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.30,000 ஆகும். மேலும், சந்தன்குமார், சத்ருகன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.