உள்ளூர் செய்திகள்

காணாமல் போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Published On 2023-07-09 10:07 GMT   |   Update On 2023-07-09 10:07 GMT
  • ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்கப்பட்டன.
  • செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட த்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக வழக்குகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, மயிலா டுதுறை மாவட்ட எல்லை க்குள் காணாமல் போன செல்போன்களை கண்டறிந்து மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவிட்டார். அதன் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில், சைபர் கிரைம் காவல் அய்வாளர் புயல் பாலச்சந்திரன், தலைமை காவலர் சுதாகர் மற்றும் போலீஸாரின் முயற்சியால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்கள் மீட்க ப்பட்டன.

இைதயடுத்து, எஸ்.பி.அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கைப்பற்றப்பட்ட செல்போ ன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஒப்படைத்தார்.

இதனால் செல்போன் திரும்ப கிடைத்த உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News