உள்ளூர் செய்திகள்

ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த ஜிம் டிரெய்னர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2023-10-09 12:51 IST   |   Update On 2023-10-09 12:51:00 IST
  • சோர்வாக காணப்பட்டதால் குளிக்க சென்றபோது மயக்கம் அடைந்துள்ளார்
  • மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே உயிர் பிரிந்துள்ளது

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜிம் டிரெய்னராக இருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை உள்ளது. ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இவர் கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, உடல் சோர்வுடன் காணப்பட்டதாக தெரிகிறது. ஜிம்மில் உள்ள குளியறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் நீண்ட நேரம் வெளியில் வராததால், அங்குள்ளவர்கள் குளியலறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News