உள்ளூர் செய்திகள்

காரில் குட்கா கடத்தியவர் கைது

Published On 2023-07-08 15:34 IST   |   Update On 2023-07-08 15:34:00 IST
  • அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
  • தடை செய்யப்பட்ட 156 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் அருகே ஜூஜூவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 156 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது22) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.

Similar News