உள்ளூர் செய்திகள்

கடையில் குட்கா விற்றவர் கைது

Published On 2023-01-03 07:19 GMT   |   Update On 2023-01-03 07:19 GMT
  • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே இருந்த பீடா கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது தெரிந்தது.

இதையடுத்து காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News