உள்ளூர் செய்திகள்

சேலம் பூ மார்க்கெட்டில் குண்டு மல்லிகை விலை சரிந்தது

Published On 2023-03-21 15:58 IST   |   Update On 2023-03-21 15:58:00 IST
  • சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டு மல்லிகை, முல்லை பூ, ஜாதி மல்லிகை, அரளி உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
  • கடந்த சில நாட்களாக கோவில் திருவிழா மற்றும் முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டு மல்லிகை, முல்லை பூ, ஜாதி மல்லிகை, அரளி உள்ளிட்ட பல்வேறு ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சேலம் பழைய பஸ் நிலையத்தையொட்டி செயல்படும் பூ மார்க்கெட் மற்றும் சென்னை, பெங்களூருக்கு விவசாயிகள் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

கடந்த சில நாட்களாக கோவில் திருவிழா மற்றும் முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரத்தை விட நடப்பு வாரத்தில் பூக்களின் விலை சரிந்துள்ளது.

குண்டு மல்லிகை கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் முல்லை பூ கிேலா ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.500-க்கும், காக்கட்டான் கிலோ ரூ.320, கலர் காக்கட்டான்- ரூ.320, மலை காக்கட்டான் -ரூ.280, சம்பங்கி ரூ.80, சாதா சம்பங்கி ரூ.80, அரளி ரூ.50, வெள்ளை அரளி ரூ.50, மஞ்சள் அரளி ரூ.50, ஐ.செவ்வரளி ரூ.60, நந்தியாவட்டம் ரூ.40, சி.நந்தியாவட்டம் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News