உள்ளூர் செய்திகள்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும்

Published On 2022-08-01 15:29 IST   |   Update On 2022-08-01 15:34:00 IST
  • பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

அரவேணு :

கோத்தகிரி மார்க்கெட் திடலில் நீலகிரி மாவட்ட மரவேலை மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் மணிமோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுந்தரம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் நவீன் சந்திரன், தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், செயலாளர் முருகேஷ், பொருளாளர் பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்த்தும் சில்வர் ஊக் காப்பி, கற்பூர, நகாமரம், சீகை போன்ற மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். தற்போது தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அதனை ஈடு கட்டும் விதமாக மரங்களை வெட்டுவதனால் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.

மேலும் பச்சை ேதயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும்.

மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பா ட்டத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News