உள்ளூர் செய்திகள்

மாதிரி தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

செங்கோட்டை நூலகம் சார்பில் குரூப்-4 மாதிரித்தேர்வு

Published On 2022-07-18 09:12 GMT   |   Update On 2022-07-18 09:12 GMT
  • சுமார் 300 மாணவர்கள் இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
  • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செங்கோட்டை:

செங்கோட்டை நூலகம் மற்றும் ஆகாஷ் அகாடமி சார்பில் மாதிரி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நன்னுலகர் ராமசாமி வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாதிரித் தேர்வை தொடங்கி வைத்தார். சுமார் 300 மாணவர்கள் இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதன் நிறைவாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்து ஆகாஷ் அகாடமி நிர்வாகி மாரியப்பன் செந்தில் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் அறிவுரைகளையும் விளக்கிக் கூறினர். தண்டழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News