சின்னசேலம் அருகே பட்டதாரி பெண் மாயம்
- தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி (வயது 43) இவருடைய கணவர் செந்தில்குமார் இவர்களுக்கு மகன் மற்றும் சௌமியா என்ற மகள் உள்ளார். சௌமியா ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வராணி, மற்றும் இவரது மகனும் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளனர். வீட்டில் சௌமியா மட்டும் தனியாக இருந்துள்ளார் பின்னர் வேலையை முடித்துவிட்டு செல்வராணியும் அவரது மகனும் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது சௌமியா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கம் மற்றும் தெரிந்த இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்காததால் நேற்று கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் செல்வராணி தனது மகள் சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கீழ்குப்பம் போலீசார் வழக்கை பதிவு செய்து மாயமான சௌமியாவை தேடி வருகின்றனர்.