உள்ளூர் செய்திகள்

கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த கேபிள்டிவி ஆபரேட்டர்கள்.

4 நாட்களாக அரசு கேபிள் முடக்கம் கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் ஆபரேட்டர்கள் புகார்

Published On 2022-11-22 09:26 IST   |   Update On 2022-11-22 10:15:00 IST
  • தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு கடந்த 4 நாட்களாக தடைபட்டுள்ளது.
  • கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கொடைக்கானல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார் மனு அளித்தனர்

கொடைக்கானல்:

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு கடந்த 4 நாட்களாக தடைபட்டுள்ளது.இதேபோல் கொடைக்கானலில் பி.எஸ்.என்.எல் சேவை கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால் கொடைக்கானல் நகர் முழுவதும் கேபிள் டிவி இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்யக்கோரி கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கொடைக்கானல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலம் வேலை நடைபெறுவதால் 15 நாட்களுக்கு ஒரு முறை பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை துண்டிப்பு ஏற்படுகிறது.

ஒருமுறை துண்டிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய அனைத்து செலவுகளையும் வாகனம், ஜெனரேட்டர், வேலையாட்கள் என சரி செய்ய 2 நாட்களாகிவிடுகிறது. ஆனால் சிலர் தனியார் கேபிள் மூலமாக கொடைக்கானலில் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.ஆனால் அந்த தனியார் கேபிள் இணைப்புகள் துண்டிப்பு ஏற்படுவதில்லை.அப்படியே துண்டிப்பு ஏற்பட்டாலும் 2 அல்லது 3 மணி நேரத்தில் இணைப்பை சரி செய்து நிகழ்ச்சிகள் தடையில்லாமல் ஒளிபரப்பு செய்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் அரசு கேபிளை தவிர்த்து தனியார் கேபிளுக்கு மாறி வருகின்றனர். எனவே ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்தனர்.

Tags:    

Similar News