உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ் கண்டக்டரிடம் செல்போன் பறிப்பு

Published On 2023-03-25 10:40 GMT   |   Update On 2023-03-25 10:40 GMT
  • அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வகுமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வகுமார் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தில் சமீப காலமாக வழிப்பறிக் கொள்ளையர்கள், நடந்து செல்லும் பெண்கள் உட்பட பல்வேறு நபர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் மற்றும் பணம், நகைகளை பறித்து செல்வது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News