உள்ளூர் செய்திகள்

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழா- தமிழக அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

Published On 2022-11-03 14:25 IST   |   Update On 2022-11-03 14:25:00 IST
  • தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட கால எண்ணம் நிறைவேறும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.
  • ராஜராஜ சோழனுக்கு 1,037 வது சதய விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட கால எண்ணம் நிறைவேறும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.

தற்போது இரண்டு நாட்களுக்கு, ராஜராஜ சோழனுக்கு 1,037 வது சதய விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

தஞ்சாவூர் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்தநாளான சதய விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News