உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி மாயம்

Published On 2023-07-15 15:20 IST   |   Update On 2023-07-15 15:20:00 IST
  • சிறுமி கடந்த 12-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
  • இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பலஇடங்களில் தேடிபார்த்தனர்.

தருமபுரி, 

தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி கடந்த 20வருடங்கள் ஆகியும் குழந்தைகள் ஏதும் இல்லை. இதனால், அவர்கள் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில் அந்த குழந்தை அவர்கள் நன்றாக படிக்க வைத்தனர். அந்த சிறுமி தற்போது அதியமான்கோட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 12-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பலஇடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் சிறுமி கிடைக்காததால், அவர் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News