திருநாவலூர் அருகே தாய் திட்டியதால் மாணவி தற்கொலை
- தரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
- மன உளைச்சல் ஏற்பட்ட தரணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உள்ள சேந்தநாடு பகுதியில் சேர்ந்தவர்தர்மலிங்கம். இவரது மனைவி சிவரஞ்சனி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது மகள் தரணி (வயது 14)அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய அம்மாசிவரஞ்சனிதண்ணீர் பிடிக்க சொன்னதாக தெரிகிறது. இதனை தரணிமறுத்ததால் அவருடைய தாய் திட்டியதாக தெரிகிறது.
இதில் மன உளைச்சல் ஏற்பட்ட தரணி வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ராமதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.