உள்ளூர் செய்திகள்

குற்றாலத்தில் நடைபெற்ற விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் பேசிய போது எடுத்த படம்.

குற்றாலத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2022-06-29 09:17 GMT   |   Update On 2022-06-29 09:17 GMT
  • விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
  • கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா குற்றாலத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு விவசாய இடுபொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட துணை செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், இஸ்மாயில், பூசைத்துரை, ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமாட்சி ராம்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட மத்திய மாநில திட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க தென்காசி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி தென்காசி மாவட்ட சங்கத்தின் புதிய தலைவராக சக்கராஜா, செயலாளராக ராஜகுரு, பொருளாளராக முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விழாவில் பல்வேறு விவசாய இடுபொருள் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக தமிழ்நாடு விவசாய இடுபொருட்கள் வியாபாரிகள் சங்க நிறுவனர் மறைந்த ரெங்கசாமி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத் தலைவர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News