உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போது எடுத்தபடம்.

சங்கரன்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

Published On 2022-12-07 09:30 GMT   |   Update On 2022-12-07 09:30 GMT
  • அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரன்கோவில்:

அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் கவுரி சங்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஐயப்பன், தலைமை கழக பேச்சாளர் கணபதி, நிர்வாகிகள் வேலுச்சாமி, தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தேசம் கட்சி சார்பில் திருநீலகண்ட ஊரணி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாவட்டச் செயலாளர் தம்பி சேவியர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர் முருகன், மாவட்டத் துணை செயலாளர் சங்கர்ஷா, நகர செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் அந்தோணி செல்வம், ஸ்டீபன், சங்கர், ஜோதிடர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News