உள்ளூர் செய்திகள்
பெரியகுளம் அருகே கஞ்சா விற்றவர்கள் கைது
- பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
- சோதனையில் கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை போலீசார் கைலாசபட்டி பகுதியில் ரோந்து சென்ற னர். அப்போது அங்கு கஞ்சா விற்ற நாகராஜபிரபு (23), முருகேசன் (29), சிவதேசிங்கு (25), கவிதா (39) ஆகிய 4 பேரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே கொண்டம நாயக்க ன்பட்டி யை சேர்ந்தவர் சரவணன் (38). இவர் தொப்பம்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். ரோந்து சென்ற ராஜதானி போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.