உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போடியில் கஞ்சா வியாபாரி கைது

Published On 2022-08-15 10:06 IST   |   Update On 2022-08-15 10:06:00 IST
  • போடி தாலுகா போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் வினோபாஜி காலனி மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது மூவேந்தர் பள்ளி அருகில் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் லிங்கேஷ் (வயது 21) என்பவர் 1.100 கிராம் கஞ்சாைவ விற்பனைக்கு வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News