உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேலை வாங்கித் தருவதாக மோசடி பணத்தை கேட்ட தொழிலாளியை கொல்ல முயன்ற கும்பல்

Published On 2022-12-30 06:41 GMT   |   Update On 2022-12-30 06:41 GMT
  • பணம் தர மறுத்து தொழிலாளியை தாக்கிய கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர்.
  • புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் பூதிப்புரம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 43). இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். சரிவர வேலை இல்லாததால் தனக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த இருளன் (43) என்பவரை அணுகியுள்ளார்.

அவரும் புலிக்குத்தியைச் சேர்ந்த செல்வம், அப்பிபட்டி முன்னாள் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் சேர்ந்து அல்லிநகரம் நகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி கருப்பசாமியிடம் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.

மேலும் அவரது கல்விச்சான்றிதழ், மருத்துவச்சான்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் அருகே வரச்சொல்லி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர். தனக்கு வேலை கூட வேண்டாம். தாம் கொடுத்த பணத்தையாவது திருப்பி தருமாறு கருப்பசாமி கேட்டா ர்.

ஆனால் அதையும் தர மறுத்து கருப்பசாமியை தாக்கிய அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தேனி கோர்ட்டில் கருப்பசாமி புகார் அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News