கள்ளக்குறிச்சியில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
- மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
- குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பபில் அவர் கூறியிறுப்பதாவது:-
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி கள் 2022-2023 மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திற னாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பொதுபிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, சிலம்பம், தடகளம் (100 மீ, 1500 மீ (பெ), 3000 மீ), குண்டு எறிதல், நீளம்தாண்டுதல் மற்றும் இறகு பந்து, கையுந்து பந்து போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தபடும்.
12 முதல் 19 வயது வரை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம் (100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1500மீ, 110மீ மற்றும் 100மீ) தடைதாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல்கையுந்துபந்து, மேசைப்பந்து, போட்டிகளும், மாற்றுதி றனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீ ஓட்டம், இறகுபந்து-5நபர், பார்வை த்திறன் மாற்று த்திறனாளி 100மீ ஓட்டம், 7 நபர் மனவளர்ச்சி குன்றியோர் 100 மீ ஓட்டம், எறிபந்து- 7 நபர், செவித்திறன், மாற்றுத்தி றனாளி 100 மீ ஓட்டம், கபடி-7நபர் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி, தடகளம் 100மீ, 1500மீ, 3000 மீ, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெரும் தனிநபர் போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.3,000, 2-ம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000, மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் கபடி, கூடைப்பந்து, கையுந்துபந்து, முதல் பரிசு ரூ.36,000 2-ம் பரிசு ரூ.24,000 3-ம் பரிசு ரூ.12,000 மற்றும் கால்பந்து, ஹாக்கி முதல் பரிசு ரூ.54,000, 2-ம் பரிசு ரூ.36,000, 3-ம் பரிசு ரூ.18,000, வீதம் ஒவ்வொரு அணிகளுக்கும் பரிசு தொகை வழங்ப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகள் தொடர்பான இதர விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்- 99435 09394, 86757 73551, 74017 03485, ல் தொடர்பு கொண்டு விபரங்கள் தெரிதந்து கொள்ளலாம். இந்த விளையாட்டு போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வீரர், வீராங்க னைகளும் பெரும் அளவில் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.