உள்ளூர் செய்திகள்

ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் கஜேந்திர சிங் ஷெகாவத்

நீர்வளத் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.210 பில்லியன் டாலர்கள் முதலீடு - ஈஷா நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர் தகவல்

Published On 2022-11-28 13:44 GMT   |   Update On 2022-11-28 13:44 GMT
  • வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் இன்சைட் நிகழ்ச்சியை கோவை ஈஷா யோகா மையம் நடத்தியது.
  • இதில் சிறப்பு விருந்தினராக ஜல் சக்தி துறை அமைச்சர் பங்கேற்று ஜல் ஜீவன் திட்டம் குறித்த விஷயங்களை பகிர்ந்தார்.

கோயம்புத்தூர்:

வர்த்தக தலைவர்களின் தலைமை பண்பை மேம்படுத்துவதற்காக ஈஷா இன்சைட் என்ற 4 நாள் நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜல் ஜீவன் திட்டம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஜல் ஜீவன் திட்டத்தின் கணக்கீட்டின்படி 2019-ம் ஆண்டு 16 சதவீதம் இந்தியர்களின் வீடுகளில் மட்டுமே குழாய் குடிநீர் வசதி இருந்தது. தற்போது அந்த அளவு 54 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் வசதியை ஏற்படுத்த செயல்கள் செய்துவருகிறோம். இதற்காக 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை இந்திய நீர் வளத் துறையில் 210 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் குடிநீரின் தரத்தை உறுதி செய்வதற்காக கிராம வாரியாக தனி குழுக்களை உருவாக்கி உள்ளோம். இதில் கிராமப்புற பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். அவர்கள் ஒரு கையடக்க கருவியின் மூலம் 12 காரணிகளைக் கொண்டு நீரின் தரத்தை ஆய்வுசெய்து ஆன்லைனில் பதிவேற்றுவார்கள். இதன்மூலம் நீரின் தரம் உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.

நவம்பர் 24 முதல் நவம்பர் 27 வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சத்குருவின் சிறப்புரைகள், சத்சங்கம் மற்றும் தியான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அத்துடன் பல்வேறு முன்னணி வர்த்தக தலைவர்கள் பங்கேற்று வர்த்தகம் மற்றும் தலைமைப் பண்பு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினர்.

ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் (HIAL) நிறுவனத்தின் இயக்குனர் சோனம் வாங்சுக், கல்வித் துறையில் அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் தலையீடுகளுக்காக அறியப்பட்டவர். அவர் அமீர் கானின் 3 இடியட்ஸ் பட கதாபாத்திரத்தின் உத்வேகமாக இருந்தார். 

அப்போது அவர் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை தொழில்முனைவோர், மேலும் மேலும் பணம் மட்டுமே சம்பாதித்துக் கொண்டே இருப்பவர்கள் அல்ல. தொழிலதிபர்கள் சிக்கலைத் தீர்ப்பவர்கள். நீங்கள் சிக்கலைத் தீர்ப்பவர்களாக இல்லை என்றால், நீங்கள் தொழில்முனைவோரே அல்ல. இரண்டாவதாக, நீங்கள் பணம் சம்பாதிப்பதோடு சிக்கலைத் தீர்த்தாலுமே கூட, நீங்கள் ஒரு நல்ல தொழில்முனைவோர் அல்ல. மற்றவர்கள் உங்களுடன் சேர்ந்து முன்னேற நீங்கள் உதவ வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான தொழில்முனைவோர் என தெரிவித்தார்.

ஏஸ் வெக்டர் (AceVector) குழுமத்தின் (Snapdeal, Unicommerce மற்றும் Stellaro) இணை நிறுவனர் குணால் பாஹ்ல் பேசுகையில், அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் வாங்கப்படும் பெரும்பாலான மென்பொருள் தயாரிப்புகள் மேட் இன் இந்தியா ஆக இருக்கும். அது நம் அனைவருக்கும் பெருமையை தேடித்தரும். உலகில் எந்த நாடும் நம்மைப் போல டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. யுபிஐ அல்லது என்டிசி ஆதார், அல்லது அக்கவுன்ட் அக்ரிகேட்டர் இந்தியா ஸ்டேக், இந்தியா ஹெல்த் ஸ்டேக் - இவை இந்தியாவிற்கு வெளியே உள்ள உலகெங்கிலும் உள்ள யாருமே கேள்விப்படாதவை. இது எங்களுக்கு ஒரு தொடக்கம். எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் புத்துணர்வோடும் உற்சாகமாகவும் உணர்கிறோம். என்னவொரு அற்புதமான தருணத்தில் நாம் இந்தியாவில் இருக்கிறோம் என மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.

பந்தன் வங்கியின் சிஐஓ மற்றும் எம்.டி சந்திரசேகர் கோஷ், புதிதாக ஒரு வங்கியை பூஜ்ஜியத்திலிருந்து உருவாக்குவதில் பெற்ற தனது அடிப்படை அறிவிலிருந்து, வழங்கிய நடைமுறை ஞானத்தால் பங்கேற்பாளர்களைக் கட்டிப்போட்டார்.

Tags:    

Similar News