உள்ளூர் செய்திகள்
வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
- வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
அரகண்டநல்லூர் அருகே சு.கொல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ்அவரது மகன் சுதர்சன். (வயது 25;) பி.இ., பட்டதாரி. வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த சுதர்சன், நேற்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஅங்கு அவர் இறந்தார்.இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்