உள்ளூர் செய்திகள்

இறந்த வெங்கட்ராஜ்.

மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்தார்: களி கிண்டும் கட்டையால் விவசாயியை அடித்து கொன்றோம்- கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-06-24 15:38 IST   |   Update On 2022-06-24 15:38:00 IST
  • அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.
  • சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த பரிதாபம்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சுண்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது50). விவசாயியான இவருக்கு யசோதா (45) என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் சுஸ்மிதாவை பெங்களுருவில் உள்ள ராஜேஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

வெங்கட்ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த 22-ந்தேதி அன்று இரவு மதுபோதையில் இருந்த வெங்கட்ராஜ் தனது மனைவி யசோதா மற்றும் கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மூத்த மகள் ஆகிய இருவரையும் தாக்கினார்.

இதில் ஆத்திரமடைந்த மனைவி, மகள் ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தி னர் ஓடி வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று அதிகாலை சிகிச்ைச பலனின்றி வெங்கட்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசார் அவரது மனைவி யசோதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது எனது கணவர் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்து வந்தார்.

இதனால் நானும் எனது மூத்த மகள் இருவரும் சேர்ந்து தான் களி கிண்டும் கட்டையால் எனது கணவர் வெங்கட்ராஜை தாக்கினோம். அதில் அவர் இறந்து விட்டார் என போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தாய், மகள் இருவரையும் கைது செய்தனர்.

Similar News