உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கம்பத்தில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

Published On 2022-12-10 11:09 IST   |   Update On 2022-12-10 11:09:00 IST
குமிள், வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கம்பம், டிச.10-

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் மற்றும் புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 2022-23ம் ஆண்டுக்கான குமிள், வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எனவே ஆதார் காடு, வங்கி கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் விவசாயிகள் கம்பம் வட்டார வேளாண்மைதுறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெறலாம் என உதவி வட்டார வேளாண்ைம உதவி இயக்குனர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News