உள்ளூர் செய்திகள்

வல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2022-10-22 07:59 GMT   |   Update On 2022-10-22 07:59 GMT
  • முகாமில் 250க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது
  • கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.

பொன்னேரி:

இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் மற்றும் ஜே எஸ் டபிள்யூ இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார் ஏற்பாட்டில் வல்லூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டு கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.

இதில் துணைத் தலைவர் இலக்கியா ராயல், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வார்டு உறுப்பினர்கள் புஷ்பா தசரதன், பொம்மி ராஜசேகர், சற்குணம் ஜான்சிராணி முனுசாமி, ராஜீவ் காந்தி, அந்தோணி, அஷ்டலட்சுமி, தாமோதரன், வேலுமணி, தேவதாஸ், ஊராட்சி செயலாளர் நாகம்மாள், இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் ஊழியர்கள் ம.மகேஸ்வரி சாம், அஜய், ஆர்.மகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்த நிலையில் 95 பேருக்கு உடனடியாக கிட்டப்பார்வை கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Similar News