உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் சட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கு இலவச பயிற்சி

Published On 2023-10-18 06:40 GMT   |   Update On 2023-10-18 06:40 GMT
  • சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்த ப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
  • திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களில் 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட 12-ஆம் வகுப்பு முடித்த மற்றும் நடப்பு ஆண்டில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் உள்ள மாணவர்களுக்கு சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்த ப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள இணைய தளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

சட்டப்ப டிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சியினை முடிக்கும் மாணவர்க ளுக்கு 2ம் கட்ட நேர்காண லுக்கான குழு விவாதம் மற்றும் எழுத்து தேர்வு களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News