உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

செல்போன் பழுதுபாா்த்தல் இலவச பயிற்சி

Published On 2023-06-26 04:54 GMT   |   Update On 2023-06-26 04:54 GMT
  • கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா
  • 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் நபா்களுக்கு கனரா வங்கி சாா்பில் செல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் தொடா்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதுகுறித்து கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் மக்களுக்கு ெசல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

இந்தப் பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 என்ற செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News