சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- பிளஸ்-2 வகுப்பு பயிலும் 172 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
- வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ்களை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சிவகிரி:
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார். முதுகலை தமிழாசிரியர் பேச்சியம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு பயிலும் 87 மாணவர்களுக்கும், 85 மாணவிகளுக்கும் மொத்தம் 172 பேருக்கு இலவச சைக்கிளையும், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவிதை போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவைகளில் வெற்றி பெற்ற 19 மாணவ - மாணவிகளுக்கு சான்றிதழ், விருதுகளை சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, செயல் அலுவலர் வெங்கடகோபு, துணைத்தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில் கவுன்சிலர்கள் சித்ராதேவி, அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் மகமாயி, கல்விக்குழு, அறப்பணிக்குழு உறுப்பினர்கள் வீரகுமார், காசிராஜன், மோகன், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.