உள்ளூர் செய்திகள்
இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி
- ஆம்புலன்சுக்குண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவமனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.
- கலெக்டர் அருண் தம்புராஜ் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
கீழையூர் ஒன்றியம் காமேஸ்வ ரத்தில் இயங்கி வரும் கோவாச் ஆஸ்பத்திரிக்கு சேவ்திசில்ரன்ஸ்அமைப்பு மூலம் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
அப்போது ஆம்புலன்சுக்கு உண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவ மனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பச்சைக்கொடி கான்பித்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
இதில் நாகை சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஜோஸ்பின்ஆமுதா, திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், கீழையூர் ஒன்றியக்குழுத்தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, கீழையூர் ஒன்றிய குழு துணை தலைவர் சவுரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன் மற்றும் மலர் கலந்துகொண்டனர்.