உள்ளூர் செய்திகள்

ஓட்டலை வாங்க அட்வான்ஸ் தருவதாக ரூ.73 ஆயிரம் மோசடி

Published On 2022-09-30 10:15 GMT   |   Update On 2022-09-30 10:15 GMT
  • சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு சொந்தமான ஹோட்டல் ஏற்காட்டில் உள்ளது. அந்த ஓட்டலை விற்பதாக கடந்த மாதம் விளம்பரம் கொடுத்துள்ளார்.
  • ரூ.20 ஆயிரத்தை மீட்டு வங்கிக்கணக்கில் சேர்த்த னர். ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம்:

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 53). இவருக்கு சொந்தமான ஹோட்டல் ஏற்காட்டில் உள்ளது. அந்த ஓட்டலை விற்பதாக கடந்த மாதம் விளம்பரம் கொடுத்துள்ளார்.அதைத் தொடர்ந்து ஒரு நபர் ஜெகதீஷ் இடம் போனில் தொடர்பு கொண்டு அந்த ஓட்டலை வாங்கிக் கொள்வதாக கூறி விலையை பேசி அதில் பாதி தொகையை அட்வான்ஸ் தருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அட்வான்ஸ் தொகையை தருவதற்கு ஜெகதீஷ் இடம் அந்த மர்ம நபர் பதிவு தொகையாக ரூ.73 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் படி கேட்டுள்ளார்.இதை உண்மை என்று நம்பிய ஜெகதீஸ் அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ரூ.73 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு அந்த நபர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.உதவி கமிஷனர் செல்லப்பாண்டியன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதை தொடர்ந்து ஜெகதீஷ் அனுப்பிய ரூ.20 ஆயிரத்தை மீட்டு வங்கிக்கணக்கில் சேர்த்த னர். ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏமாற்றுப் பேர்வழிகள் தற்போது நூதனமாக பல்வேறு முறைகளில் வேலை வாங்கித் தருவதாகவும்,பணத்தை இரட்டிப்பு செய்வதா கவும்,விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அனுப்புவதாகவும்,கூறி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். செல் போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களை ஆராய்ந்த பிறகு அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News