உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் தற்கொலை

Published On 2023-11-28 10:36 GMT   |   Update On 2023-11-28 10:36 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பில்லாரி அக்காரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை( 21) இவர் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து பெற்றொர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஏழுமலை கடந்த 24ந்தேதி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று ஒசூர் அலச நத்தம் பகுதியை சேந்தவர் சீனிவாசன்(49) மீன் வியாபாரி.

இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சீனிவாசன் 23ந்தேதி விஷம் குடித்தார். அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அக்கோ போலீசார், அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் வைரமணி(63) இவருக்கு குடிபழக்கத்துக்கு அடிமையானவர்.

இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ந்தேதி மீண்டும் வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுக்கவே விஷம் குடித்தார். அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று பாரூர் அரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(29) இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சல் அடைந்த விக்னேஷ் கடந்த 22ந்தேதி விஷம் குடித்து அதே பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News