உள்ளூர் செய்திகள்

புதிய நூலக கட்டிடம் கட்ட பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.

நூலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

Published On 2022-08-15 10:03 GMT   |   Update On 2022-08-15 10:03 GMT
  • முதல்- அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ. 1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 4200 சதுரடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உலக நூலகத் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்து, வளர்ந்தார். இவர் பிறந்த சீர்காழியில் உள்ள கிளை நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அவதி அடைந்ததோடு, மழைக்காலங்களில் நூல்கள் நனைந்து சேதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வாசகர்கள் கோரிக்கை வைத்தனர்.அதனைஏற்று எம்.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ சட்டசபையில் இதனை வலியுறுத்தி புதிய நூலகம் கட்டிடம் கட்டித் தர முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். முதல் அமைச்சர் உத்தரவின் பேரில் புதிய கட்டிடம் கட்ட ரூ.1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து 4200 சதுரஅடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

நகர்மன்றதலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார். பொது–ப்பணித்துறை (கட்டிடம்) உதவி செயற்பொறியாளர் நாகவேல், உதவிபொறியாளர் ஜான்டிரோஸ்ட், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர் ராமு, வாசகர் வட்ட தலைவர் செம்மலர்.வீரசேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், முத்துக்குமரன், பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலு, ரோட்டரி சாசன தலைவர் பாலவேலாயுதம், பொறியாளர் சிவகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News